சட்டமா அதிபரின் அனுமதியுடன் யுகதனவி ஒப்பந்தம் கைச்சாத்து!

Yugadanaw power plant kerawalapitiya e1632406226836
Yugadanaw power plant kerawalapitiya e1632406226836

யுகதனவி ஒப்பந்தத்தின் அடிப்படை சரத்துக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான ஒப்பந்தம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.