பூஸா சிறையில் மேலும் 10 கைதிகளுக்குக் கொரோனா!

jail
jail

காலி பூஸா சிறைச்சாலையில் மேலும் 10 கைதிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் இன்று தெரிவித்துள்ளது.

குறித்த சிறைச்சாலையில் 42 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 10 பேருக்குக்  கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்களுடன் தென் மாகாணத்திலலுள்ள சிறைச்சாலைகளில் கொரோனாத்  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,693 ஆக உயர்வடைந்துள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாயலயம் மேலும் தெரிவித்துள்ளது.