உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

Shot Gun
Shot Gun

பொத்துவில் மற்றும் ஹொரவபொத்தான ஆகிய பிரதேசங்களில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொத்துவில் காவல்துறை பிரிவில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 25 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரவபொத்தான காவல்துறை பிரிவில் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மொரகேவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.