கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

download
download

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.