தமிழகம் – நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்குப் படகு மூலம் 96 கிலோகிராம் கஞ்சாவைக் கடத்திச் செல்ல முயன்ற இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
குறித்த கடத்தலுக்காகப் பயன்படுத்தப்படவிருந்த படகையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, வேதாரண்யம் கடலோரக் காவல்துறையினர் நேற்று (04) மாலை இரகசிய கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகிலிருந்து 3 மூட்டைகளில் 96 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 33 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.