மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
துன்னாலை ஆண்டாள் வளவு பகுதியைச்சேர்ந்தவரே இறந்தவர் இந்தச் சம்பவம் இன்று கரவெட்டி வடக்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது என்று நெல்லியடி காவல்துறையினர் கூறினர். சம்பவத்தில் வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.