கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்த எட்டு இலட்சத்து 90 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (07) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.