ஈயத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி பரிதாப மரணம்

dethbody
dethbody

வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஈயத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் தலையில் ஈயக்கட்டி விழுந்தமையால் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

இன்றையதினம் குறித்த தொழிற்சாலையின் இயந்திர பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மீது ஈயக்கட்டி ஒன்று விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்தார்.

சம்பவத்தில் மாத்தளை பகுதியை சேர்ந்த வேலு உதயராச் வயது 37 என்ற நபரே மரணமடைந்துள்ளார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்