சீரற்ற வானிலையால் 5 பேர் பலி : 4,391 பேர் பாதிப்பு

20210604 180503
20210604 180503

சீரற்ற வானிலையால் கடந்த இரண்டு வாரங்களில் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொடரும் அடைமழை காரணமாக நாடளாவிய ரீதியில் 5 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது