தலைமை பதவியில் உள்ளவர்களின் பலவீனம் காரணமாக இலங்கை சுதந்திர கட்சி தொடர்பில் மக்களுக்கு உள்ள நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் தற்போதைய அதிகாரிகளில் மாற்றம் ஏற்படவில்லை எனின் கட்சிக்கு எதிர்காலம் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்