மீரிகம – பஸ்யால வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி: 2 பேர் காயம்

Accident 1 850x460 acf cropped
Accident 1 850x460 acf cropped

மீரிகம – பஸ்யால வீதியில் தன்சல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இச்சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிற்றுந்து ஒன்றும், பாரவூர்தியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்