மஹா ஓயாவை அண்டிய சில பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம்!

10A 685x462 1
10A 685x462 1

கடுமையான மழை காரணமாக மஹா ஓயா நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால், அதனை அண்டிய பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கிரிஉல்ல, வரதகொல்ல, நால்ல, திவுல்தெனிய, வெலிஹிந்த, அலவ்வ, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பிரதேசங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.