சிவசிதம்பரத்தின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம்

IMG 3ec2a8bb5b38ba007bc348785a4bb0cc V
IMG 3ec2a8bb5b38ba007bc348785a4bb0cc V

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09) காலை 9 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் வவுனியா பல்கலைக்கழகத்தின் மருத்துவருமான ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராசா, முன்னாள் நகரசபை உறுப்பினர் ரி. கே. இராசலிங்கம், தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.