மண்மேடு சரிந்து விழுந்ததில் யுவதி மரணம்

death 1
death 1

குருணாகல் – நாரம்மல, வென்னொருவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வென்னொருவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான யுவதியொருவர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது, குறித்த யுவதி, அவரது தாய் மற்றும் சகோரதன் ஆகியோர் இருந்துள்ளனர்.

எனினும், இச்சம்பவத்தில் குறித்த யுவதி மாத்திரம் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

எனினும், யுவதியின் தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் எவ்வித காயங்களுமின்றி உயிர்த்தப்பியுள்ளனர்.

உயிரிழந்த யுவதி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் தாதியாகப் பணியாற்றிவந்தவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.