பாதுகாப்புக்கு அவசியமான புதிய உபகரணங்கள் படையினரால் கண்டுபிடிப்பு!

22
22

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் இராணுவ மற்றும் சிவில் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.

அதற்கமைய பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படையினர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அவசியத்தை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட 15 கண்டுபிடிப்புத் திட்டங்கள் படையினரால் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

பனாகொடவிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது மேற்படி உபகரணங்கள் உரிய தரப்புக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.