கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய்க்கான கேள்வி இரட்டிப்பாகியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நாளாந்த மண்ணெண்ணெய்க்கான கேள்வியானது 550 மெற்றிக் டன்னாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எரிபொருள் விலை அதிகரிப்பை தீர்மானிப்பதற்கான பொறுப்பை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.