முருகப் பெருமானை வேண்டி அனுஸ்டிக்கப்படும் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் சிறப்புற இடம்பெற்றது.
ஒட்டுசுட்டான் தான்தோன்ரீஸ்வரர் ஆலயம், முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயம், புதுக்குடியிருப்பு முருகன் ஆலயம், மல்லாவி முருகன் ஆலயம் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் இடம்பெற்றது.
கள்ளப்பாடு வைரவர் ஆலயத்திலும் சூரசம்ஹாரம் இன்று சிறப்புற இடம்பெற்றது. தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக ஆலய சூழலின் ஒரு பகுதியில் வெள்ளநீர் தேங்கியுள்ள நிலையில் வெள்ளத்தின் மத்தியிலும் சூரசம்ஹாரம் சிறப்புற இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற பூசைகளை தொடர்ந்து ஆலயத்திலிருந்து முருகப் பெருமான் எழுந்தருளி சூரனுடன் போர் செய்து சூரணை வதம் செய்து, அடியார்களுக்கு அருள் பாலித்தார்.