சீமெந்து தட்டுப்பாடு டிசம்பர் நடுப்பகுதியில் நிவர்த்தியாகும்

cement
cement

நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீமெந்து தட்டுப்பாடு காரணமாகக் கட்டட நிர்மாணத்துறையினர் பாரிய அசௌகரியங்களை முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.