கொழும்பு – கண்டி பிரதான வீதியை திறப்பது தொடர்பில் இன்று அறிவிப்பு

kan
kan

காலநிலை மற்றும் வீதியின் நிலைமையைத் தொடர்ச்சியாக அவதானித்து, கொழும்பு – கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவ பிரதேசத்துடன் மூடப்பட்டுள்ள பகுதியைத் திறப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று(12) தீர்மானிக்கப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய தெரிவித்துள்ளார.

மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால், நேற்று முன்தினம் இரவு 10 மணிமுதல், கொழும்பு – கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவ பகுதி மூடப்பட்டது.

இந்தநிலையில், இன்று காலை 9 மணிவரை அந்த வீதியை மூடி வைப்பதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, கடுகன்னாவை பிரதான வீதியில், மண்மேடும், பாறைகளும் சரிந்து வீழ்ந்தன.

இந்த நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகமும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொண்டன.

இதையடுத்து, போக்குரவரத்து தடையை அறிவித்து, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும் என நெடுஞ்சாலை அமைச்சு அறிவித்திருந்தது.

இதற்கமைய, கொழும்பிலிருந்து கண்டிக்கு பயணிக்கும் வாகனங்கள், அம்பேபுஸ்ஸ ஊடாகக் குருநாகல் பிரவேசித்து, கட்டுகஸ்தோட்டை கலகெதர ஊடாகவும், கேகாலையிலிருந்து பொல்கஹவெல – குருநாகல், கலகெதர கட்டுகஸ்தொட்டை ஊடாகவும், மாவனல்லையிலிருந்து ரம்புக்கனை – ஹதரலியத்த – கலகெதர, கட்டுகஸ்தோட்டை ஊடாகவும், மாவனல்லையிலிருந்து ஹெம்மாதகம கம்பளை வழியாக – பேராதனை ஊடாகவும் கண்டிக்கு பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்தார்.