பெருந்தோட்டங்களிலுள்ள நெடுங்குடியிருப்புக்களை (லயன் அறைகள்) 3 வருடங்களில் இல்லாது செய்வதற்காகத் தோட்ட வீடமைப்பு அபிவிருத்திக்கு, பாதீட்டினூடாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது.
2022 பாதீட்டை முன்வைத்து உரையாற்றிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.