லங்கா ப்ரிமியர் லீக் தொடரில் அங்கம் வகிக்கும் அணிகளுக்காக அண்மையில் இடம்பெற்ற வீரர்கள் தெரிவு திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குசல் ஜனித் பெரேரா, எஞ்சலோ மெத்தியூஸ் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் இணைத்துகொள்ளப்படவில்லை.
இந்தநிலையில், அது தொடர்பில் அவதானம் செலுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட், லங்கா ப்ரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் வீரர்களை 22 ஆக அதிகரிக்க முடியும் என அறிவித்துள்ளது.
இதற்காக சகல அணிகளும், இணைத்து கொள்ளப்படாத தலா இரண்டு வீரர்கள் வீதம் அணிக்குள் உள்வாங்க வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு இணைத்து கொள்ளக் கூடிய வீரர்களின் பெயர்களை லங்கா ப்ரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுப்பி வைத்துள்ளது.