மெத்யூஸ், குசல் உட்பட 10 வீரர்களை எல்.பி.எல்.லில் இணைக்க பரிந்துரை!

thumb large 26
thumb large 26

லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டில் உரிமைத்துவ அணிகளினால் தெரிவு செய்யப்படாமல் இருந்த சில தேசிய வீரர்கள் உட்பட 10 வீரர்களை இணைத்துக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, அக்கில தனஞ்சய, ப்ரவீன் ஜயவிக்ரம, மினோத் பானுக்க, சதீர சமரவிக்ரம, அஷான் ப்ரியஞ்சன், ஷிரான் பெர்னாண்டோ ஆகிய வீரர்களையே ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த 10 வீரர்களில் தலா இருவரை உரிமைத்துவ அணிகள் தெரிவு செய்துகொள்ளலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உரிமைத்துவ அணிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.