நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்சார் மற்றும் மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றில் வேகமானது மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.