தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

IMG 20211115 WA0032
IMG 20211115 WA0032

இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைபடுத்தும் தெருவை தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்துக்குள்ளால் தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

IMG 20211115 WA0029

இதனால் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டை மிகுந்த சிரமத்தின் மத்தியில் மேற்கொள்கின்றனர். இடுப்பளவுக்குள்ளான குளத்து நீரிற்குள்ளால் பாடசாலைக்குச் செல்லும் துன்பியலான நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் இவ் வீதியை தனியார் சிலர் அது தமது காணி எனத் தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியினை அடைத்துள்ளனர்.

IMG 20211115 WA0031

இதன் பிரகாரம் தனியார் காணிக்காரர்கள் வீதியை மறித்தும் குளத்தின் ஒருபகுதியை இணைத்தும் தமது எல்லையை இட்டுள்ளனர். இதனால் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாரிய வெள்ளத்தின் மத்தியில் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

IMG 20211115 WA0030

இவ் வீதியானது சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் இம் மக்கள் தமது நிலையை காண்பிக்க கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை 7.00 மணியளவில் முன்னெடுத்துருந்தனர்.  தமது வீதிக்கு உரிய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.