நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஏப்ரல் மாதம் கைதான அவர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (15) உயர் நீதிமன்றில் ஆராயப்பட்டபோது, அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.