கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ‘மொனுபிரவீர்’ என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட்-19 தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இந்த மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கான இயலுமை தொடர்பில் தான் கொவிட் -19 தொழில்நுட்ப குழுவிடம் கோரியிருந்ததாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் அக்குழு இதனைத் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.