சட்ட கற்கை நுழைவுப்பரீட்சை வினாத்தாள் வெளியாகியமையால் தமிழ் மாணவர்கள் பாதிப்பு!

download 36
download 36

சட்டம் கற்பதற்காக பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பிற்காக நடத்தப்படும் வருடாந்த நுழைவுப்பரீட்சை 14/11/2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு 4 நாட்களுக்கு முதலே “ப்ரமுஹா லோ ஸ்கூல்” என்ற சிங்கள மாணவர்கள் கற்கும் தனியார் கல்வி நிலையம் பரீட்சை வினாத்தாள்களை வெளியிட்டிருந்தது. இதனால் தமிழ் மொழிமூலமாக பரீட்சைக்கு தோற்றியவர்களைவிட சிங்கள மாணவர்களே அதிகம் வெளிவாரி சட்ட கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்படும் நிலை காணப்படுகின்றது. இந்தப்பரீட்சை வினாத்தாள் முறைக்கேட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக இனபேதம் கருதாமல் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.