முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் என்னை சிலர் சிறையில் அடைக்க முயற்சி செய்கிர்கள் முடிந்தால் சிறையில் அடைத்துப்பார்க்கட்டும் என்கிறார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்தும் அவர் உரையாற்றும் போது,
“மன்னாரில் மீள்குடியேற்ற பணிகளை முன்னெடுப்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கமே எனக்கு உதவியது.
மரங்களை வெட்டுவது ஒரு பாவமான செயல் என இஸ்லாம் மார்க்கத்தில் போதிக்கப்பட்டுள்ளது. நாம் மரங்களை வெட்டி நாசம் செய்தவர்கள் அல்ல.
நான் விபத்துவ வனப்பகுதியை வெட்டி நாசம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டபோதும் அவ்வாறு செய்திருந்தால் எனக்கு அதிகபட்ச தண்டனையை வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன்.