தாய் தந்தையை இழந்த நிலையில் வாழ்ந்த யுவதிக்கு கரம் கொடுத்த அமைப்பு

IMG 20211115 WA0019
IMG 20211115 WA0019

தாய்த்தமிழ் பேரவையின் ஒழுங்கமைப்பில் கனடாவில் வசித்து வரும் குணரெத்தினம்.குணசேகர் அவர்களின் மூன்று இலட்சம் பெறுமதியில்நிதி அனுசரனையில் வவுனியா சிவபுரம் கிராமத்தில் தனது தாய், தந்தையை இழந்த நிலையில் அம்மம்மாவுடன் வசித்து வந்த சிறுமிக்கான அரை நிரந்தர வீடு அமைத்து வழங்கியதோடு சிறுமியின் கல்விக்கான உதவியாக துவிச்சக்கரவண்டிமற்றும் கற்றல் உபகரணங்களும் ஒரு வருடத்திற்கான கல்விக்கான கொடுப்பனவுமற்றும் உடை, உலர் உணவு பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது

தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.ரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குத்தந்தை ஜெகநாதன், சிவபுரம் கிராமசேவையாளர்,திருமதி திருமதி .கிருசிகா, கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திரு நாகேந்திரம் சமூக செயற்பாட்டாளர் கவிஞர் மாணிக்கம். ஜெகன் மற்றும் தாய்த்தமிழ் பேரவையின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்