வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட நபர் கைது

kaithu
kaithu

வெல்லவாய, ஆனப்பலம பிரதேசத்தில்  இன்று (16) காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீட்டுத் தோட்டமொன்றில் காணப்பட்ட கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டதுடன், உலர் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரால் மிக சூட்சுமமான முறையில் தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 10 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது 150 கிராம் உலர்ந்த கஞ்சாவும், 325 கஞ்சா விதைகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆனப்பலம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவராவார்.

அத்துடன், சந்தேக நபர் வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.