உரிய தினத்தில் வேதனம் வழங்க அரச தோட்டங்கள் நடவடிக்கை – செந்தில் தொண்டமான்

Senthil Thondaman
Senthil Thondaman

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய தினத்தில் வேதனம் வழங்கப்படாமலிருந்த, மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான சில தோட்டங்களில், வேதனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 10ஆம் திகதி வேதனம் வழங்கப்படுகின்றது.

எனினும், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தோட்டங்களில் கடந்த 10ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய வேதனம், வழங்கப்படாதிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களது வேதனத்தை உரிய தினத்தில் வழங்குமாறு வலியுறுத்தியும், குறித்த பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த தினங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த விடயத்தில் தாம் தலையீடு செய்த நிலையில், மொனராகலை மாவட்டத்தில் உள்ள தோட்டமொன்றில், தொழிலாளர்களுக்கு வேதனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.