அருட்தந்தை சிறில் காமினி இன்று 9 மணித்தியால வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
நேற்றைய தினமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகைதந்த அவர் 8 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக முறைப்பாடளித்திருந்தார்.
அதற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றும் இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.