இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சபா பீடத்தில் பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், பனாமுர பகுதியில் காவல்நிலையத்துக்கு முன்பாக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கருத்துரைக்க ஆரம்பித்தார்.
இதன்போது எதிர்க்கட்சியினர் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.