இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவருமான சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடவர் கிரிக்கெட் குழுமத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடவர் கிரிக்கெட் குழுமத் தலைவராக கடந்த 9 ஆண்டுகளாக அனில் கும்ப்ளே செயற்பட்டு வந்தார்.
இந்த நிலையில், குறித்த பதவிக்கு சவுரவ் கங்குலியை வரவேற்பதாக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோனி கிரேவ் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் கிரிக்கெட் குழுமத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.