நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நாவலரின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு!

VideoCapture 20211118 123646
VideoCapture 20211118 123646

நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. 

கார்த்திகை தீபத் திருநாளில் இன்று காலை 10.30 மணியளவில் இறைவணக்கம் செலுத்தப்பட்டு நந்திக்கொடி ஏற்றப்பட்டதுடன் நாவலர் பெருமானின் சிலை திறந்து வைக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் பிரதி மாநகர ஆணையாளர் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பருவ கால மழை நீர் முகாமையும் திருக்கோவில் குளங்களும் எனும் தலைமையில் சர்வராசா அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது