தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

download 42
download 42

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை அந்தப் பதவிக்கான கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் குற்றவியல் மற்றும் குற்ற நீதித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் உதய குமார அமரசிங்க பணியாற்றுகிறார்.