வட மாகாண ஆளுநர் இன்று துனது கடமைகளை பொறுப்பேற்பு

charls
charls

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, பி.எஸ்.எம் சார்ள்ஸ், இன்று (02) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னதாக கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்தார்.

சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிருந்தார்.

வடமாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.