எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் சேதத்துக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

IMG 1265 1536x1074 1
IMG 1265 1536x1074 1

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று சோஷலிச இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்டது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலால் ஏற்பட்ட கடல் அழிவு தொடர்பான ஆராய்ச்சியில் தாமதம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதற்கான இழப்பீட்டை இதுவரை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சோஷலிச இளைஞர் சங்கத்தினால் பத்தரமுல்ல சௌசிறிபாய முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மே மாதம் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட சேதம் குறித்து 6 மாத காலங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.