பெண்கள் அணியும் கொலுசின் நன்மைகள் என்ன தெரியுமா

21 6198870fc89a9
21 6198870fc89a9

பெண்கள் நகை அணிவது என்பது பாரம்பரியமாகவே முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. தங்களின் வசதிக்கேற்ப தங்கள், வெள்ளி, பிளாட்டினம் என நகைகளை அணிந்து வருகின்றனர்.

இதில் வெள்ளி நகை அணிவதால் உடலில் உள்ள முக்கிய வர்மப்புள்ளிகளைத் தூண்டிவிடப்பட்டு ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகின்றது.

குளிர்ச்சி தருணம் உலோகமான வெள்ளிக்கு இந்தியாவில் தனி மதிப்பு உண்டு. மற்ற நகைகளை அணிந்தால் சில தருணங்களில் ஒவ்வாமை ஏற்படுகின்றது. ஆனால் வெள்ளி நகைகள் அணிந்தால் அவ்வாறு எந்த ஒவ்வாமையும் ஏற்படாமல் இருப்பதோடு, ஆயுள் விருத்தியாகும் என்றும் ஆயுர்வேதம் கூறுகின்றது.

பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்தனர். இன்றும் சில மலைவாழ் மக்கள் இவ்வாறு அணிந்து வருகின்றனர். ஆனால் சமீப காலங்களில் நாகரீகத்திற்கு ஏற்ப பெண்கள் அணிந்து வருகின்றனர்.

தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

சிறுவயது குழந்தைகளின் அசைவினை கண்காணிக்கவும், குழந்தை நடக்கும் போது சங்கீதம் கேட்க வேண்டும் என்று கொலுசு அணிந்து விடுகிறோம்.