புதுவருட இலக்கு ; ஜி.எல் பீரிஸ்

Capture 2
Capture 2

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதே தமது கட்சியின் புதுவருட இலக்கு என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் நிறைவடைவதற்குள் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த தேர்தலில் தமது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தங்களால் முடிந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்துவோம்.

அதற்கு பொதுமக்களின் நம்பிக்கையை முதலில் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

சகல அரச நிறுவனங்களிலும் வினைத்திறனுடனான சேவையை முன்னெடுப்பதன் ஊடாக அந்த இலக்கை அடைவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.