மாவீரர் வாரத்தை முன்னிட்டு காவல்துறையினர் விசேட நடவடிக்கை

IMG 20211122 WA0012
IMG 20211122 WA0012

தமிழ் மக்களின் விடுதலைக்காக வித்தாகிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்றையதினம் ஆரம்பித்துள்ள நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த வருடங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபி மற்றும் வவுனியா குளத்தடி மற்றும் நகரின் முக்கிய சந்திகளில் காவல்துறையினர் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.