ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின் பிரதானி நிக்கோலாய் பட்ருசேவ்(Nikolai Patrushev) இன்று(22) இலங்கை வருகிறார்.
ரஷ்யாவின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி, இலங்கையில் அவர் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு பொறுப்புக்கூறும் பாதுகாப்பு பேரவையின் பிரதானியாக அவர் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.