முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் கொவிட் 19 பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் கடந்த வெள்ளிக்கிழமை(19) காலை11.30மணியளவில் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ரஹைதம் நிறுவனத்தின் நிதி அனுசரனையிலும், சி.எச்.ஏ (Consortium of Humanitarian Agencies) நிறுவனத்தின் செயற்படுத்தலிலும் அத்தியவசியமான உலருணவுப்பொருட்கள் அடங்கியதாக ஒருவருக்கு ரூபா 4,290 பெறுமதியான உலருணவுப் பொருட்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந், கிராம சேவகர் – நிர்வாகம், ரஹைதம் மற்றும் சி.எச்.ஏ நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த பயனாளிகள் கலந்தகொண்டிருந்தனர்.
IMG 20211122 WA0108