மொட்டு சின்னத்தில் மாத்திரமே போட்டி – அமைச்சர் திட்டவட்டம்

p.ranatunga
p.ranatunga

பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் மாத்திரமே போட்டியிட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க திட்டவட்டமாக தெரிவித்தார்.

மஹர மற்றும் வத்தளை தொகுதிகளின் உள்ளூராட்சி உறுப்பினர்களுடனான நேற்றைய (01) சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் கதிரை அல்லது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு எவரினதும் பிடியில் சிக்க தான் தயாராக இல்லையெனவும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து மொட்டுச் சின்னத்தில் போட்டியிட விரும்பம் இல்லாதவர்கள் தனித்து போட்டியிட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.