அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கான எந்தவித தேவையும் எதிர்க் கட்சிக்கு இல்லை!

4 ec
4 ec

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரையில், அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கான எந்தவித தேவையும் எதிர்க் கட்சிக்கு இல்லையென முன்னாள் சபைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருந்த போதிலும், சிலர் கூறுவது போன்று அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்க தரப்பின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு எதிர்க் கட்சிக்கு எந்தவித தேவையும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.