க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளுக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – மஹிந்தானந்த

mahindananda aluthgamage 1
mahindananda aluthgamage 1

க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை தடை செய்யும் வர்த்தமானியை ரத்து செய்யும் வகையில் நேற்றிரவு அதிவிசேட வர்த்தமானி ஒன்று வௌியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வர்த்தமானி வௌியிட்டமை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்திருந்தார்.

அத்துடன், பீடைக்கொல்லி பதிவாளர் பதவியிலிருந்து கலாநிதி ஜே.ஏ.சுமித் நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.