திஸ்ஸகுட்டியாரச்சிக்கு சபநாயகர் கடும் எச்சரிக்கை

THISSA KUTTIARACHCHI
THISSA KUTTIARACHCHI

பெண்கள் தரப்பினரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாரச்சிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாரச்சி சனிக்கிழமையன்று பாதீட்டு உரையின்போது, பெண்களை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன நேற்று முன்வைத்த சிறப்புரிமைப் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் சபாநாயகர் கடுமையான தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியினர் உறுப்பினர்களில் பலர் சபாபீடத்தின் மையப்பகுதியில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.