யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட காரைநகர் பகுதியில் தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளை பாதையை விட்டு விலகிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது பயணிகளுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாத போதிலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.