யாழில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதோடு 7 பேர் பாதிப்பு!

IMG 20211124 184328 4
IMG 20211124 184328 4

யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதோடு 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை ஜே/84 கிராம சேவையாளர் பிரிவில் காற்றுடன் கூடிய மழையின் தாக்கத்தினால் ஒருவீடு சேதம் அடைந்துள்ளதால் அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குரிய தற்காலிக இருப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் தெரிவித்தார். இன்றைய தினம் குறித்த நாவாந்துறையில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று அடைந்ததோடு தற்காலிக இருப்பிடத்துக்குரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.