கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பு கோட்டையிலிருந்து கறுவாத்தோட்டம் வரையிலான வாகன போக்குவரத்து மார்க்கத்தை, மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரை மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (26) முதல் அமுலாகும் வகையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கொள்ளுப்பிட்டி சந்தியினூடாகக் குறித்த பிரதேசத்திற்கு பயணித்தல் இடைநிறுத்தப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதற்குப் பதிலாக, கொழும்பு கோட்டையிலிருந்து வரும் வாகனங்கள் ஆர்ப்பாட்ட இடத்துக்கு அருகில் திரும்பி சாரணர் மாவத்தை ஊடாக, உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் பித்தளை சந்தி வழியாகக் கறுவாத்தோட்டம் நோக்கிச் செல்ல முடியும் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.